விஸ்-வரா-வன் | சினி-சிரி-சிறு கதை
முன்குறிப்பு : இதில் வரும் சம்பவம், பெயர் , கதை யாவும் கற்பனையே உயிரோடிருப்பவரையோ இறந்தவரையோ இனி பிறக்கப்போபவரையோ குறிப்பிடுவன அல்ல . பின்முன்குறிப்பு : இதுல சிலருக்கு டபுள் , ட்ரிபுள் & எக்கச்சக்க ரோல் விஸாம் கஸ்மீரியை உமர் பாய் குடோனுக்குள் அழைத்துச்சென்றார் . அப்போது அங்கே நோயாளி போல் தோற்றமளித்த சிலர் இருந்தனர் . " இவங்களுக்கெல்லாம் என்ன ?" என விஸாம் கேட்க , " வாதம் , தீவிர வாதம் . டீரிட்மென்ட் குடுக்க டாக்டர கூட்டிட்டு வர சொன்னா அப்சல் இப்படி சொதப்பிட்டான் , அதான் உங்கள கூப்டேன் ." என்றார் உமர் . " ஏன் என்ன ஆச்சு ?" என்று விஸாம் கேட்டுக்கொண்டே உள் குடோனுக்குள் நுழைய , ".... ண்ணா " என்றொரு அபலக்குரல் கேட்டது . " தளபதி ... நீங்க என்ன இங்க ?" " ஒருத்தர் வந்து இந்த ஜில்லால யார் டாக்டர்னு கேட்டாரு . என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே சொல்லிட்டாங்க ... அது நான்தான்னு சொன்னேன் . கட் பண்ணி பாத்தா என்ன இங்க கட்டிப்போட்டு வெச்ச