இருவர்
பண்ணையாரும் பத்மினியும் பார்த்தீர்களா? அந்தப்பண்ணையார் ஜோடியைப்போலவே மிகவும் அன்னியோன்யமான ஒரு ஜோடி. "என்ன கண்ணு... ஏனுங் மாமா..." என அவர்களின் கொங்குத்தமிழ் இருவரையும் இன்னும் innocently romantic ஆக்கியது. நம் இந்தப்பண்ணையாரின் பத்மினியின் பெயர் தமிழ்செல்வி. செல்வியின் அப்பாவித்தனத்துக்கு முன்னால் கமலா காமேஷையெல்லாம் தாராளமாக தீவிரவாதி பட்டியலில் சேர்த்துவிடலாம். அவ்வளவு உலகமகா அப்பிராணி. கோலப்பொடி வாங்குவது முதல் கோவில் லட்சார்ச்சனை செய்வதுவரை கணவரே முடித்துக்கொடுத்துவிடுவதால் வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தை சட்டை செய்யவும் இல்லை, அது குறித்த அனுபவமும் இல்லை. என்ன தேவையென்றாலும் கணவருக்கு செய்யும் ஒரு தொலைபேசி அழைப்பிலேயே வீட்டு வாசலில் கிடைத்தது. இவருக்கு வீட்டைத்தாண்டி ஒரு உலகம் உள்ளதென்றால் அது கணவர், மகள், மகன் மட்டுமே. அன்பாலே அழகான வீடு என அழகிய மெல்லிசைப்பாடலாக வாழ்க்கை சென்றது. ஒரு காலை, குறிப்பாகச்சொல்லவேண்டுமென்றால் மகன் கல்லூரிக்கு செல்லவிருக்கும் முதல் நாள் காலை, நெஞ்சு வலிக்கிறது என படுத்தவர் வலி முடிந்தும் எழவில்லை. ஒரே நொடியில் மொத்தக்குடும்பத்தையும் ஸ